Friday 18 March 2016

நான்கு வகை கீரையும் அதன் அதிசய நன்மையும்

                                                                    
மணத்தக்காளிக் கீரை இதன் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.

பசலைக்கீரை வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் இதற்கு உண்டு.


பசலைக் கீரை முக அழகையும், சருமத்தில் பளபளப்பையும், கவர்ச்சியான நிறத்தையும் பெற இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும்.

வல்லாரைக் கீரை இதனை நிழலில் உலர்த்திப் பொடித்து நன்கு உலர்ந்த பிறகு, காலை, மாலை என  இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கீரிப்பூச்சிகள், நாடாப்புழுக்கள்,ஆகியன வெளியேறுவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம்.

No comments:

Post a Comment