எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.
ஆரஞ்சுப்பழத் தோலை பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.இதனை பொடி செய்து அதனுடன் சிறிது பால் ,தயிர் சேர்த்து ஃபேஸ்பேக் போல பயன்படுத்தி வந்தால் பொலிவிழந்த முகம் களைகட்டும்.
ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.
பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.
எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.
மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து அதனை தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம் மற்றும் தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.
கண்களில் கருவளையங்களை கொண்டவர்கள் பலர் உண்டு. இதற்கு திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால் போதும். கருவளையங்கள் போய் விடும்.
No comments:
Post a Comment