Sunday 21 February 2016

நீங்கள் அழகானால் (அழகு குறிப்புக்கள் )




1) முக பரு நீங்க

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவவும்

2) முகத்தில் கரும்புள்ளிகள் மறைய 

கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மாஸ்க் போட்டால் கரும் புள்ளிகள் மறையும்

3) கருவளையம் நீங்க 

வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி கண்களுக்கு மேல் 20 நிமிடங்கள் வைத்திரும்பது கருவளையதிற்கு நல்ல பலன் தரும்

4)  அழகான கூந்தலுக்கு

பாதாம் ஆயில் , முட்டை வெள்ளைகரு கலந்து தலையில் மசாஜ் செய்யவும் பின் அரை மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளிக்கவும்

5) உதடு வெடிப்பு சரியாக

வெண்ணை உடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடில் தடவ உதடு வெடிப்பு குறைந்து மென்மை ஆகும்

6) பாத வெடிப்பு சரி செய்ய

எலுமிச்சை பழத்தை துண்டு துண்டாக வெட்டி உப்பு சேர்த்து பாதத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்

7) மூக்கில் ஏற்படும் ப்ளாக் ஹெட்ஸ் போக்க 

நன்கு கொதிக்கும் நீரில் மூக்கிற்கு ஆவி பிடித்து பின் ஹெட்ஸ் ரிமூவர் கொண்டு ப்ளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் மெதுவாக அழுத்தி ரிமூ செய்ய வேண்டும்

8) பற்கள் வெண்மையாக 

ஆரஞ்சு பழ தோல் அல்லது அதன் சாறு வைத்து பல் துலக்கி வந்தால் பல் வெண்மை ஆகும்



Friday 19 February 2016

முருங்கைக் காய் ரகசியம்



முருங்கைக் காய்  சத்துள்ள உணவு ஆகும் . இது உடல் வலிமையைக் கொடுக்ம் . இது உடல் சூட்டை அதிகரிக்கும் . இது சிறுநீரையும் தாதுவையும் அதிகரிக்கும் . கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவு

முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்தும்  பயன்படும்

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது இதன்  இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் வலுவாகும் . தோல் வியாதிகள் குறையும்

முருங்கை இலை காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடலாம் நல்ல பயன் கிடைக்கும்.


Tuesday 16 February 2016

உங்களுக்கு தெரியுமா ஆறு சுவைகள் பற்றி




உங்களுக்கு தெரியுமா ஆறு சுவைகள் பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்

இனிப்புச் சுவை

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

பயன்கள்

தசையை வளர்க்கும்  

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை  மனதிற்கும்,  உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

குறிப்பு

இனிப்புச் சுவை அதிகமானால்  உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.


காரச் சுவை 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது .

பயன்கள்

எலும்புகளை வளர்க்கும்


பசியுணர்வைத் தோற்றுவிக்கும், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்யும் . இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.


குறிப்பு

காரம் அதிகமானால்  உடல் எரிச்சலை ஏற்படும் . உடல் சூடு அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்றும்.


 துவர்ப்புச் சுவை

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

 பயன்கள்

இரத்தத்தைப் பெருக்கும்

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது . அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும். இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யம்.


குறிப்பு 

துவர்ப்புச் சுவை  அதிகமானால் , இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.


புளிப்புச் சுவை
கிடைக்கும் உணவுப் பொருட்கள்

எலுமிச்சை, தயிர், மோர்,  இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, புளிச்ச கீரை, மாங்காய், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

 பயன்கள்

கொழுப்பினை அதிகரிக்கும்

உணவிற்கு ருசி சேர்க்கும் சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்யும் . இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

குறிப்பு 

புளிப்புச் சுவை அதிகமானால்  தாக உணர்வினை அதிகமாகும். பற்களைப் பாதிக்கப்படும் . நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

உவர்ப்புச் சுவை

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

உப்பு, கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


 பயன்கள்

உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும்

உவர்ப்பு தவிர்க்க இயலாத சுவை ஆகும் ,அளவோடு உணவில் சேர்த்துக்கொண்டால் அனைவராலும் விரும்பப்படும் . மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு பெறுகிறது .


குறிப்பு 

உவர்ப்பு சுவை  அதிகமானால் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகபடுத்தும், சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்றும்


கசப்புச் சுவை



கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை அதிகம் உள்ளது.


பயன்கள்

நரம்புகளை பலப்படுத்தும் 


அதிகம் வெறுக்கப்படும் சுவை ஆனால்  அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஆகும் . மற்றச் சுவைகளை அறிய இது உதவுகிறது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்தும். உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகிறது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

குறிப்பு 

கசப்புச் சுவை அதிகமானால்  உடலின் நீர் குறைந்துப் போகும்  மேனி வறண்டு கடினத்தன்மை பெரும் . எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல நேரிடும்


அகத்தி கீரை





1) அகத்தி கீரை குளிர்ச்சி தரும் குணமடையது. உடலில் உள்ள அனைத்து விதமான விஷங்களையும் முறியடிக்ககூடியது. மருந்துகளை உண்ணும் காலங்களில் அகத்திக்கீரையை உண்டால் மருந்தின் குணத்தை முறியடித்துவிடும் எனவே மருந்து உண்ணும் காலங்களில் அக்த்திக்கீரையை எடுத்துக்கொல்லாமல் இருப்பது நல்லது.

2) கத்தி கீரையை திணம் தோறும் உண்ணாமல் அடிக்கடி உண்பது நல்லது.

3) அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

4)  அகத்திக் கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.

5) உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும் குணமுடையதாம் நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.

6) அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இள நரை ஏற்படுவதையும் தடுக்கும்.

7) அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

Sunday 14 February 2016

சிவப்பு கீரை



1) சிவப்பு கீரையில்  அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது

2) சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

3) சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது

4) கீரையில் பீட்டா கரோட்டின், லுடீன், குளோரோபில், ஃபோலிக் அமிலம் மற்றும் மாங்கனீசு கொண்டிருக்கிறது. எந்த வகையான கீரையாக  இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல், ஆம்பியண்ட் காய்ச்சல் போன்றவற்றிக்கு தீர்வு வழங்குகிறது.  கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது.

5) நார்சத்து உணவான  கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

6) சிறுநீரகத்தை மேம்படுத்தி மகப்பேறு காலத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சிறுநீரகத்தை சுத்தபடுத்த வேண்டும் என்றால் ரத்தத்தை சுத்தபடுத்திய  பின்னர் காய்கறி போல கீரையை சாப்பிடலாம்.

7)  நோய் வராமல் தடுக்க தினமும் 100 கிராம் கீரையை ஒரு வேளையாவது உணவில் சேர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வோம்.. ஏதேனும்  நோய் இருந்தாலும் கூட கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.


Thursday 11 February 2016

10 குறிப்புக்கள் மேனி மினு மினுக்க



1. வறண்ட சருமம் உடையவர்கள் முகத்தில் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாபிட்டு வரலாம்

2. வறண்ட சருமம் உடையவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் தேன் மிகசிறந்த நிவாரணி

3. ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக்கி  அதனுடன் தண்ணீர் சேர்த்து முகம் , கை, கால் களில் தடவி வர வறண்ட சருமம் மறையும்

4. தண்ணீர் அதிக அளவில் பருக வேண்டும்

5. அரை முடி எலுமிச்சம் சாறு அதனுடன் 1 முடி சுடு தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் விடில் பருகி வர தோல் மினு மினும்பு அடைவதோடு உடம்பில் உள்ள தேவை இல்லா சதைகள் குறையும்

6. தக்காளி பழ சாருடன் தயிர் கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் தழும்புகள் மறையும்

7. எலுமிச்சை சாறினை பரு உள்ள இடத்தில தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவி வர பருக்கள் நீங்கும்

8. வாழை பழ தோலை அரைத்து சிறிது திருடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்

9. பப்பாளி பழத்தை பாலுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் முகம் பள பளபாகும்

10. மஞ்சளுடன் துளசி இலையை அரைத்து பூசி வந்தால் முகம் சொர சொரப்பு நீங்கும்

Wednesday 10 February 2016

இளநரை நீங்க



1.  காபி, டீ போன்றவை உடலில் ஊட்டச்சத்து சேர்வதைத் தடுக்கின்றன எனவே காபி, டீ அருந்துவதை குறைக்க வேண்டும்

2. ஒரு டீஸ்பூன் நெய் அதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா மூன்றையும் சாறாக்கி இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டுவந்தால் இளநரை நீங்கி கூந்தல் கருப்பாக மாறும்.

3. முட்டை, பால், பேரீச்சம்பழம், கீரை, பருப்பு போன்றவற்றைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும்.

4. தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்

5. காலை உணவாக வாரத்தில் இரண்டு முறை சிவப்பு அரிசியை வேகவைத்து தேங்காய், வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்

6. நான்கு பாதாம் பருப்பு, நான்கு பிஸ்தா பருப்பு இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கிச் சாப்பிட்டு வரலாம்

7. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

9. இரண்டு பேரீச்சம்பழம், ஆறு உலர்ந்த திராட்சையும் சேர்த்துச் சாப்பிடலாம்

இந்த உணவு முறை தொடர்ந்து எடுத்துவந்தால்   இளநரை நீங்கிவிடும் 

Tuesday 9 February 2016

கடலை மாவும், முகப்பொலிவும்



கடலை மாவு பயன்படுத்தி சருமத்தை பொலிவுற செய்யலாம்

1. கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவைத்து அதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேருங்கள் பிறகு இதை முகத்தில் ‘பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

2. தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

3. இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

4. இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

Monday 8 February 2016

பெருஞ்சீரகம்

பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது.

இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள்.
 
இதற்கான எளிய தீர்வுண்டு.

நாம் அன்றாடம் சமயலறையில் இருக்கும் எளிய மூலிகையான பெருஞ்சீரகம் தான் அது.
 
பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து , ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்காக பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Friday 5 February 2016

ரோஜா 10 பயன்கள்

  1. ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும்.
  2. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.
  3. பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.
  4. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து  ஒருகைப்பிடயளவு  இதழை ஒரு சட்டியில் போட்டு  ஒரு டம்ளர்  தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.
    5. ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும்.
    6.
    பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால்  பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் 
    சேர்க்க க்கூடாது.
    7. ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.
    8. 
    ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.
    9. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.
    10.
    ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.



     

     
     

வாழைப்பழம் சாப்பிடுங்க




1) வாழைப்பழத்தில்  வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது

2) வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்

3)  வாழைப்பழம் எனர்ஜி லெவலை  எப்போதும் சரியாக வைத்திருக்கும்

4) செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது

5) 8 மாதத்தில்  இருந்து  குழந்தைகளுக்கு  நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம்

6) வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையைப் போக்கி, சுத்தம் செய்து விடுவதால்  வயிற்றுப்புண் பிரச்னைகளும் நெருங்காது

Thursday 4 February 2016

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு


1) கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!

2) கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

3) கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

4) வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

5. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

6. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

7. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

8. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

9. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

10. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

கூந்தல் உதிர்வை தடுக்கும் வெங்காயம்

தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.

இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று.

* வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசுங்கள். பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.

* தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

* வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.

* வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.

Source: http://www.maalaimalar.com/2016/01/27074855/ways-to-use-onion-juice-for-ha.html

முளைக்கட்டிய பயிறு சர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்கிறது



சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் முளைக்கட்டிய பயிறு

எல்லா வகைத் தானியங்களையும் முளைகட்டி, மறுநாள் காலையில் தக்க பக்குவத்தோடு சாப்பிடுவது உயிர்ச்சத்து மிகுந்ததாய் இருக்கும். 
 
 வறுத்தோ, வேகவைத்தோ சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடுவ்வதால் 90 பங்கு சத்து அதிகம் கிடைக்கிறது. 
 
அந்தந்தத் தானியங்களின் முளையிடும் காலம் அறிந்து முளைகட்டி சாப்பிடவும். அப்படிச் சாப்பிடுவது நல்லது.
 
அப்படியில்லாமல் 4,5 தானியங்களை ஒன்றாக ஊற வைத்து முளைக்கட்டி சாப்பிடுவது அவ்வளவு சிறந்தது அல்ல.
 
ஒரு நாளைக்கு ஒரு தானியமாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் ருசியாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 
தனித்தனியாகச் சாப்பிடும்போது சுவை தேவையென்றால் தேங்காய், வெல்லம், காரத்திற்கு மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். 
 
இவ்வாறான தானிய உணவுகளைச் சாப்பிடும் போது காலை உணவுடனோ அல்லது மதிய உணவுடனோ சாப்பிட வேண்டும். இரவில் இதைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
 
Source: http://tamil.webdunia.com/article/home-remedies/sprouted-beans-to-keep-diabetes-under-control-116020400058_1.html